இதுவரை இல்லாத அளவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 657 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக தேசிய பணப்பரிவர்த்தனை இந்தியக் கழகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
அதாவது, ஆகஸ்ட் மாதத்தில் 657 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும், அதன் மூலம் ரூ.10.72 லட்சம் கோடி அளவுக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க.. மீண்டும் மலர்கிறதா அனார்கலி - சலீம் காதல் கதை?
ஆண்டுக்கு ஆண்டு, யுபிஐ பரிவர்த்தனை 100 சதவீதம் அதிகரிப்பதாகவும், பரிவர்த்தனை செய்யப்படும் பணத்தின் அளவு 75 சதவீதம் அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுளள்து.
பணப்பரிமாற்றம் செய்யப்படும் சராசரி தொகையின் மதிப்பும் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.