புது தில்லி: தில்லியில் உள்ள வனவிலங்கு உயிரியல் பூங்காவில் விஜய் - சீதா ஜோடிகள் மூன்று புலிக் குட்டிகளுக்கு பெற்றோராகியுள்ளனர்.
வெள்ளைப் புலி வகையைச் சேர்ந்த 7 வயதாகும் சீதா, கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி மூன்று குட்டிகளை ஈன்றது. தாய் உள்பட குட்டிகள் ஒரு மாத காலத்துக்கு தனிமைப்படுத்தப்பட்டு பராமரிப்பில் வைக்கப்படும். இந்தக் குட்டிகளின் தந்தை அதே வனவிலங்கு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 7 வயத வெள்ளை நிற புலியாகும்.
இதையும் படிக்க.. மீண்டும் மலர்கிறதா அனார்கலி - சலீம் காதல் கதை?
கடந்த 2020 டிசம்பர் மாதம் வெள்ளைப் புலி குட்டிகளை ஈன்றபோது, புலியும், அதன் மூன்று குட்டிகளும் மரணமடைந்தன. தற்போது இந்த பூங்காவில் இரண்டு ஜோடி வெள்ளைப் புலிகள் உள்ளன. நான்கு மேற்குவங்க புலிகள் உள்ளன. இவற்றில் ஒரு ஆண் புலியும், மூன்று பெண் புலியும் அடங்கும்.
பொதுவாக வெள்ளைப் புலிகளின் ஆயுள் காலம் என்பது 12 முதல் 14 ஆண்டுகளாகும்.