காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏழைகள் நலனுக்காக செயல்படுவதில்லை என திருவனந்தபுரத்தில் பாஜக மூத்த தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 30ஆவது தென்மண்டல கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையும் படிக்க | இலங்கை திரும்பிய கோத்தபயவுக்கு அரசு மாளிகை, முழு பாதுகாப்பு
இதனைத் தொடர்ந்து பாஜக எஸ்சி அணி கருத்தரங்கில் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சி நாட்டில் அழிந்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளை உலகம் அழித்து வருகிறது. கேரளத்திற்கு எதிர்காலம் உள்ளதென்றால் அது பாஜகவால்தான்” எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பழங்குடியினர் மற்றும் ஏழைகளுக்காக பணியாற்றுவதில்லை. அவர்களை வெறும் வாக்குகளாக மட்டுமே பார்க்கின்றனர் எனத் தெரிவித்தார்.