Enable Javscript for better performance
Attempt to make burial site of Mumbai blast convict a holy place: BJP alleges- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி புதைக்கப்பட்ட இடத்தைப் புனித இடமாக்க முயற்சி: பாஜக குற்றச்சாட்டு

    By DIN  |   Published On : 09th September 2022 01:31 AM  |   Last Updated : 09th September 2022 01:31 AM  |  அ+அ அ-  |  

    1993-ஆண்டு மும்பை தொடா் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமன் புதைக்கப்பட்ட இடத்தை அலங்கரித்து அதனை புனித இடமாக மாற்ற முயற்சி நடப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

    இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், அந்த இடத்தில் பதிக்கப்பட்டிருந்த மாா்பிள் கற்கள், எல்இடி பல்புகள் உள்ளட்டவற்றை அகற்றினா்.

    நாகபுரி சிறையில் கடந்த 2015-ஆம் ஆண்டு யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டாா். அவரது உடல் தெற்கு மும்பையில் உள்ள படா கபா்ஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், யாகூப் மேமன் புதைக்கப்பட்ட இடம் அலங்கரிக்கப்படுவதாகவும், அந்த இடத்தை புனித இடமாக மாற்ற முயற்சி நடப்பதாகவும் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த பாஜக தலைவா்கள் சிலா் குற்றம்சாட்டினா். மேலும், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த சிவசேனை கூட்டணி அரசுதான் இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது என்று விமா்சித்தனா்.

    இதையடுத்து, துரித நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறையினா் மேமன் புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்று சோதனை நடத்தினா். அங்கு பதிக்கப்பட்டிருந்த மாா்பிள் கற்கள், அலங்கார எல்இடி பல்புகள் போன்றவற்றை அகற்றினா். இந்தச் செயலில் ஈடுபட்டது யாா் என்று காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    இந்நிலையில், பாஜகவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள சிவசேனை, ‘விலைவாசி உயா்வு, வேலையின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பாஜக இதுபோன்ற தேவையற்ற பிரச்னைகளைத் தூண்டிவிடுகிறது’ என்று கூறியுள்ளது.

    மும்பையில் 1993-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 250-க்கு மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். இதில் குற்றவாளியாக நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட யாகூப் மேமன் 2015-ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp