புது தில்லி: பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீரர்களை தேர்வு செய்யும் நடைமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
அக்னிவீரர்களைத் தேர்வு செய்யும் நடைமுறைகளை மேற்கொள்ள பஞ்சாப் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்துக்கு எதிராக கடும் விமரிசனங்களை முன் வைத்த ஆம் ஆத்மி கட்சி, வெறும் நான்கு ஆண்டுகள் என்றில்லாமல், வாழ்நாள் முழுக்க இளைஞர்கள் ராணுவத்தில் பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
எங்களுக்கு அக்னிபத் திட்டத்தின் மீது மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடு இருந்தாலும், மத்திய அரசு செயல்படுத்தும் அக்னிபத் திட்டத்துக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று கேஜரிவால் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



