பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

அக்னிபத் திட்டத்துக்கு ஆம் ஆத்மி முழு ஒத்துழைப்பு வழங்கும்: கேஜரிவால்

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீரர்களை தேர்வு செய்யும் நடைமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image

அரவிந்த் கேஜரிவால் (கோப்புப் படம்)

Updated On :1 பிப்ரவரி 2024, 3:49 pm IST


புது தில்லி: பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீரர்களை தேர்வு செய்யும் நடைமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

அக்னிவீரர்களைத் தேர்வு செய்யும் நடைமுறைகளை மேற்கொள்ள பஞ்சாப் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபத் திட்டத்துக்கு எதிராக கடும் விமரிசனங்களை முன் வைத்த ஆம் ஆத்மி கட்சி, வெறும் நான்கு ஆண்டுகள் என்றில்லாமல், வாழ்நாள் முழுக்க இளைஞர்கள் ராணுவத்தில் பணியாற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

எங்களுக்கு அக்னிபத் திட்டத்தின் மீது மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாடு இருந்தாலும், மத்திய அரசு செயல்படுத்தும் அக்னிபத் திட்டத்துக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று கேஜரிவால் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.