விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியீடு: முழு விவரம்!

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 12:02 pm IST

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகியதையடுத்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார். 

இந்த நிலையில், கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாரபூர்வ அறிவிப்பாணையை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, வேட்பு மனுத் தாக்கல் செப். 24 முதல் 30 ஆம் தேதி வரை 

வேட்புமனு மீதான பரிசீலனை - அக். 1

வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் - அக். 8 

போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - அக். 8

தேர்தல் நடைபெறும் நாள் - அக். 17 (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை) அனைத்து காங்கிரஸ் தலைமை அலுவலகங்களிலும் நடைபெறும். 

வாக்கு எண்ணிக்கை - அக். 19 

முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் - அக். 19 அன்று வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அறிவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

Story image

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூர், அசோக் கெலாட், திக்விஜய் சிங் ஆகியோர் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.