கூட்டணியை மாற்றி பிகார் மக்களை ஏமாற்றிவிட்டார் நிதீஷ் குமார் என்று பிகார் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகி, லாலு பிரசாத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியமைத்த பிறகு, முதல் முறையாக பிகார் சென்றிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, மகாராஷ்டிர மாடலை மீண்டும் உருவாக்க பாஜக முயன்றதாகக் குற்றம்சாட்டி, முதல்வர் நிதீஷ் குமார் பாஜக கூட்டணியிலிருந்து விலகி, லாலு பிரசாத் யாதவுடன் கைகோர்த்துக் கொண்டு பிகாரில் புதிய ஆட்சியைத் தொடங்கினார்.
இது குறித்து விமரிசித்த அமித் ஷா, பிகாரில் நடந்த பேரவைத் தேர்தலில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்குத்தான் மக்கள் வாக்களித்தனர். ஆனால், கூட்டணியிலிருந்து விலகி பிகார் மக்களை ஏமாற்றிவிட்டார் நிதீஷ் குமார் என்று குறிப்பிட்டார்.
மேலும், இங்கிருந்து அங்கு மாறிவிட்டால், நிதீஷ் குமார் பிரதமராகிவிடுவாரா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அமித் ஷா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் : அமித் ஷா
திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?

ஆம் ஆத்மியில் 'நச்சுத்தன்மை' வாய்ந்த பணிச்சூழல்! மனம்திறந்த ராகவ் சத்தா!

இரு மலர்கள் தொடருக்கு குவியும் வாழ்த்து!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


