அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

கூட்டணியிலிருந்து மாறினால் நிதீஷ் பிரதமராகிவிடுவாரா? அமித் ஷா கடும் தாக்கு

கூட்டணியை மாற்றி பிகார் மக்களை ஏமாற்றிவிட்டார் நிதீஷ் குமார் என்று பிகார் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

News image

அமித் ஷா

Updated On :23 செப்டம்பர் 2022, 6:17 pm IST


கூட்டணியை மாற்றி பிகார் மக்களை ஏமாற்றிவிட்டார் நிதீஷ் குமார் என்று பிகார் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

பாஜக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகி, லாலு பிரசாத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியமைத்த பிறகு, முதல் முறையாக பிகார் சென்றிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, மகாராஷ்டிர மாடலை மீண்டும் உருவாக்க பாஜக முயன்றதாகக் குற்றம்சாட்டி, முதல்வர் நிதீஷ் குமார் பாஜக கூட்டணியிலிருந்து விலகி, லாலு பிரசாத் யாதவுடன் கைகோர்த்துக் கொண்டு பிகாரில் புதிய ஆட்சியைத் தொடங்கினார்.

இது குறித்து விமரிசித்த அமித் ஷா, பிகாரில் நடந்த பேரவைத் தேர்தலில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்குத்தான் மக்கள் வாக்களித்தனர். ஆனால், கூட்டணியிலிருந்து விலகி பிகார் மக்களை ஏமாற்றிவிட்டார் நிதீஷ் குமார் என்று குறிப்பிட்டார்.

மேலும், இங்கிருந்து அங்கு மாறிவிட்டால், நிதீஷ் குமார் பிரதமராகிவிடுவாரா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அமித் ஷா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.