திருமண நிகழ்வில் ஆதார் அட்டை கொண்டு வந்தவர்களுக்கு மட்டும் உணவு அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் திருமண நிகழ்வில் போட்டோ ஷூட், உணவு, அலங்காரம் என அனைத்து ஏற்பாடுகளிலும் புதுமையைகாட்டி உறவினர்களின் கவனத்தை மணமக்கள் வீட்டார் ஈர்த்து வரும் சூழலில், வித்தியாசமான அணுகுமுறையால், நாட்டு மக்களின் கவனத்தை ஒரு திருமணம் ஈர்த்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் உணவு அரங்கிற்குள் ஆதார் அட்டை காட்டும் விருந்தினர்களை மட்டுமே பெண்வீட்டார் அனுமதித்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு உணவு வழங்கப்படாததால், பலரும் எரிச்சலுடன் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பெண்வீட்டார் தரப்பில் கூறுகையில், அந்த மண்டபத்தில் சகோதரிகள் இரண்டு பேருக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்றதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், ஆதார் உள்ளவர்களை மட்டும் அனுமதித்ததாக தெரிவித்தனர்.
மேலும், இந்த திருமணத்தில் நடந்த சம்பவத்தை விடியோ எடுத்த சில விருந்தினர்கள் சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேகாலயா: வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தளர்வு!

ராகுலுடன் சேர்ந்து மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சீரழிந்துவிட்டனர்! மத்திய அமைச்சர் காட்டம்!

ஊர்ந்து சென்று பதவியைப் பெற்றும் நன்றியில்லை; அவர் பெயரைச் சொல்லக்கூட விருப்பமில்லை! ஓபிஎஸ்

சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

