அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக கேஜரிவால் இன்று ஆஜராக உள்ள நிலையில், காஷ்மீர் கேட் அருகே ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் கேட் அருகே கூடிய தொண்டர்கள், அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து தில்லி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் கேட் அருகே முழக்கங்களை எழுப்பியவர்களை காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
தில்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராவதற்கு முன்பு, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை நடத்தினார். தனது இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனையில் உம்ரான் உசேன், ராஜ்குமார் ஆனந்த், கைலாஷ் கெலாட் உள்ளிட்ட தில்லி அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றத்துக்கான 'விசில்'

வரலாறு படைத்தது தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி!
வரலாறு படைத்தது தவெக! தனிப்பெரும் கட்சியாக வெற்றி!
அன்று ஆந்திரத்தில் என்டிஆர்; இன்று தமிழகத்தில் விஜய்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

