ராய்கர்: சத்தீஸ்கரில் உள்ள ஒரு பண்ணையில் குட்டி யானை ஒன்று மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரி தெரிவித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் பகுதியில் உணவு தேடி, காட்டிலிருந்து கிராமத்தை நோக்கிச் சென்றபோது, மின்சார கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே குட்டி யானை இறந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சத்தீஸ்கரில் கடந்த 5 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட யானைகளை நோய்கள் தாக்கியும், வயது முதிர்வு, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.