மின்சாரம் பாய்ந்து யானை பலி!

சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணையில் குட்டி யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ராய்கர்: சத்தீஸ்கரில்  உள்ள ஒரு பண்ணையில் குட்டி யானை ஒன்று மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரி தெரிவித்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் பகுதியில் உணவு தேடி, காட்டிலிருந்து கிராமத்தை நோக்கிச் சென்றபோது, ​​மின்சார கம்பியில் சிக்கி சம்பவ இடத்திலேயே குட்டி யானை இறந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சத்தீஸ்கரில் கடந்த 5 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட யானைகளை நோய்கள் தாக்கியும், வயது முதிர்வு, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com