இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பிகாரில் போலி மதுபானம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

பிகாரில் போலி மதுபானம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :18 ஏப்ரல் 2023, 9:06 am

DIN


பிகாரில் போலி மதுபானம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. 

மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ள பிகாரில் சட்டவிரோதமாக தொடர்ந்து போலி மதுவிற்பனை நடைபெறுகிறது. இதனால் உயிர்ப்பலியும் அதிகரித்து வருகின்றது. 

இந்நிலையில் ஏப்ரல் 15-ஆம் தேதி மோதிஹரி மாவட்டம் லட்சுமிபூர்,பாகர்பூர், ஹர்சித்தி பகுதியில் போலி மதுபானம் அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், இதுதொடர்பாக மதுவிலக்கு அதிரடிப் படை பணியாளர்கள் இருவர் மற்றும் 9 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

போலி மதுபானம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.