அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மாநகராட்சி பள்ளிகளின் வளர்ச்சிக்காக ரூ.400 கோடியை விடுவித்த தில்லி அரசு

எம்.சி.டி(தில்லி மாநகராட்சி) நடத்தும் பள்ளிகளின் வளர்ச்சிக்காக தில்லி அரசு ரூ.400 கோடியை விடுவித்தது என்றார் கல்வி அமைச்சர் அதிஷி.

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 6:50 pm

DIN

புதுதில்லி:  எம்.சி.டி(தில்லி மாநகராட்சி) நடத்தும் பள்ளிகளின் வளர்ச்சிக்காக தில்லி அரசு ரூ.400 கோடியை விடுவித்தது என்றார் கல்வி அமைச்சர் அதிஷி.

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் அதிஷி தெரிவித்ததாவது:

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் நோக்கம் தில்லி மாநகராட்சி நடத்தும் பள்ளிகளை மேம்படுத்துவதாகும். 

தற்போது தில்லி மாநகராட்சி பள்ளிகளில் சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்விக்கு தில்லி அரசு எப்போதுமே முன்னுரிமை அளித்து வருகிறது. அதே வேளையில் பட்ஜெட்டில் பெரும்பகுதியை கல்விக்காக ஒதுக்கியுள்ளது. மாநகராட்சி பள்ளிகளை சிறந்ததாக மாற்றுவதே எங்கள் முக்கிய நோக்கம் என்ற நிலையில், முதல் தவணையாக ரூ.400 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்றார்.

தில்லி மேயர் ஷெல்லி ஓபராய் கூறுகையில், ஆம் ஆத்மி அரசு எப்போதும் கல்வியில் கவனம் செலுத்துகிறது, டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் சித்தாந்தங்களைப் பின்பற்றுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.