நாட்டை பிளவுபடுத்த சிலர் வெறுப்பு அரசியல் செய்து வருகின்றனர்: மம்தா குற்றச்சாட்டு

வெறுப்பு அரசியல் செய்து நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இதனை எனது உயிரைக் கொடுத்து தடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும்...
நாட்டை பிளவுபடுத்த சிலர் வெறுப்பு அரசியல் செய்து வருகின்றனர்: மம்தா குற்றச்சாட்டு
Published on
Updated on
1 min read

கொல்கத்தா: வெறுப்பு அரசியல் செய்து நாட்டை பிளவுபடுத்த சிலர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இதனை எனது உயிரைக் கொடுத்தும் தடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார்.

பானர்ஜி நகரின் ரெட் ரோட்டில் உள்ள ஈத் நமாஸ் மசூதியில் நடைபெற்ற ரமலான் நிகழ்ச்சியில் மம்தா பேசுகையில், 2024 மக்களவைத் தேர்தலில் வலதுசாரி பாஜக தோற்கடிக்கப்படுவதை உறுதிசெய்ய மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"நாட்டை பிளவுபடுத்துவதற்காக சிலர் மிக மோசமான வெறுப்பு அரசியலை செய்து வருகின்றனர். அதனை என் உயிரைக் கொடுத்தும் தடுக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் நாட்டை பிளவுபடுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்," என்று அவர் கூறினார்.

ஒரு கும்பல் நாட்டின் அரசியலமைப்பை மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய பானர்ஜி, "தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வந்தார்கள்; மேற்கு வங்காளத்தில் அதை செய்ய விடமாட்டேன்".

"தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் அண்டை நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை உரிமைகளை வழங்கும் குடிமக்கள் திருத்தச் சட்டம் தேவை என்றாலும், தற்போதுள்ள குடியுரிமை பதிவுகள் மற்றும் செயல்கள் போதுமானது என்பது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.

"அதிகாரத்தில் உள்ள அரசியல் எதிரிகளின் பணபலம் மற்றும் (மத்திய) ஏஜென்சிகளுக்கு எதிராக நான் போராடத் தயாராக இருக்கிறேன். ஆனால், ஒருபோதும் நான் தலை குனிய மாட்டேன்," என்று அவர் கூறினார்.

“அடுத்து நாட்டில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பதைத் தீர்மானிக்க இன்னும் ஓராண்டு உள்ளது. அந்த தேர்தலில் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் என்று உறுதியளிப்போம்.

வரும் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களுக்கு எதிராக வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும். இன்று அரசியல் சட்டம் மாற்றப்படுகிறது, வரலாறு மாற்றப்படுகிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க தவறினால் அனைத்தும் முடிந்துவிடும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com