போராட்டக்களத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பயிற்சி
போராட்டக்களத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பயிற்சி

பாலியல் புகார்: போராட்டக்களத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பயிற்சி

தில்லி ஜந்தர்மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டக்களத்தில் இருந்தபடியே பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்தனர்.

தில்லி ஜந்தர்மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டக்களத்தில் இருந்தபடியே பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்தனர்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வீராங்கனைகள் கூறும் பாலியல் புகாா் மிகவும் தீவிரமானது என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், இதுகுறித்து தில்லி போலீஸுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாா் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குப் பதிவு செய்யக் கோரியும், இது தொடா்பான மேரி கோம் குழு அறிக்கையை வெளியிட கோரியும் முன்னணி மல்யுத்த வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினா்.

வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் ஆகிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே வீரர், வீராங்கனைகள் போராட்டக்களத்திலேயே பயிற்சியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதியிலுள்ள சாலையோரம் மல்யுத்தம் நடத்தி பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்ய மறுப்பது மனித உரிமை மீறலாகும் எனக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் 7 வீராங்கனைகள் மனுத் தாக்கல் செய்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com