வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க இயலாது: ராகுல் காந்தி

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க இயலாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 1:16 pm

DIN

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க இயலாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற மே 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரங்களின்போது அரசியல் தலைவர்களுக்கிடையே வார்த்தைப் போரும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க இயலாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. கர்நாடகத்தின் கலபுரகியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர் இதனை தெரிவித்தார்.

இந்த பரப்புரையின் போது அவர் கூறியதாவது: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்சம் 150 இடங்கள் கிடைக்கும். கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க இயலாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.