அப்போது அவர் பேசியதாவது: பாஜகவின் இரட்டை என்ஜின் அரசு மட்டுமே மாநிலத்தை ஆபத்திலிருந்து காக்க உதவும். எஸ்எம்எஸ் (சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே, சிவக்குமார்) கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானவர்கள். எப்படி ஆபத்தான எஸ்எம்எஸ் உங்களது தொலைபேசியை அழித்துவிடுமோ அதே போல இந்த எஸ்எம்எஸ் கர்நாடகத்தின் எதிர்காலத்தைப் பாழாக்கிவிடும். இரட்டை என்ஜின் அரசால் மட்டுமே கர்நாடகத்தைக் காப்பாற்ற முடியும். பிரதமர் நரேந்திர மோடி வளமையான இந்தியாவை உருவாக்கி வருகிறார். ஆனால், காங்கிரஸ் அவருக்கு எதிராக விஷத்தினை பரப்பி வருகிறது. சிலர் பிரதமர் மோடியை மரணத்தின் வியாபாரி என்கிறார்கள், சிலர் மோடிக்கள் திருடர்கள் என்கிறார்கள், சிலர் அவரை விஷப் பாம்பு என்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி காங்கிரஸிடமிருந்து பரப்பப்படும் விஷங்களை அருந்தும் நீலகண்டன் என்றார்