ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பேனா சின்னத்துக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

சென்னை மெரீனா கடற்கரைப் பகுதி கடலில் பேனா சின்னம் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரிய ரிட் மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்க மறுத்தது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2023, 8:05 pm

 நமது நிருபர்

சென்னை மெரீனா கடற்கரைப் பகுதி கடலில் பேனா சின்னம் அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரிய ரிட் மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்க மறுத்தது.

மனுவை திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இது தொடா்பாக உயா்நீதிமன்றத்தையோ அல்லது பசுமைத் தீா்ப்பாயத்தையோ அணுகவும் அனுமதி அளித்தது.

தமிழக முன்னாள் முதல்வா் மறைந்த மு. கருணாநிதி நினைவாக சென்னை மெரீனா கடற்கரையில் அவரின் நினைவிடத்துக்கு அருகில் கடலில் 134 அடி உயர பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. சுற்றுச்சூழல் காரணங்களைத் தெரிவித்து இந்த முடிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த நல்லதம்பி, நாகப்பட்டினத்தைச் சோ்ந்த சூசை அந்தோனி உள்ளிட்ட 8 மீனவா்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனா்.

பேனா சின்னம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சா் டி. ஜெயக்குமாா் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல், சுதான்ஷு துலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘மனுவில் சுற்றுச்சூழல் தொடா்புடைய கேள்வி எழுப்பியுள்ளதால், இந்த விவகாரத்தை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திலோ அல்லது உயா்நீதிமன்றத்திலோ முறையீடு செய்யலாம்’ என்று கூறியது.

இதையடுத்து, மனுவை திரும்பப் பெறுவதாக மனுதாரா்கள் கூறியதைத் தொடா்ந்து, அதற்கு அனுமதித்து, இந்த விவகாரத்தை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அமா்வு கூறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.