மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உத்தரகண்ட் நிலச்சரிவில் 4 பேர் பலி: 10க்கும் மேற்பட்டோர் காணவில்லை

உத்தரகண்டில் கௌரிகுண்ட் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர். 

News image
Updated On :4 ஆகஸ்ட் 2023, 3:14 pm

DIN

உத்தரகண்டில் கௌரிகுண்ட் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர். 

உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் யாத்திரை பாதையில் கௌரிகுண்ட் அருகே நேற்றிரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கில் 3 கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. 10க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

காணாமல் போனவர்களைக் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

பாதிக்கப்பட்டவர்கள் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற குழுக்களும் சம்பவ இடத்தில் இருப்பதாக பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறினார். 

ருத்ரபிரயாக் மாவட்ட ஆட்சியர் சௌரப் கஹர்வார் கூறுகையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றார். மாநில தலைமைச் செயலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் புஷ்கர் தாமி நேரில் சென்று மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினார். 

மேலும், வெள்ள அபாயம் உள்ள இடங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும் என்றும், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தங்கியுள்ளவர்களை வெளியேற்றுமாறும் அவர் உத்தரவிட்டார். இதனிடையே கேதார்நாத் யாத்திரையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.