பஞ்சாபில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்றை எல்லை பாதுகாப்புப் படையினரும் மாநில காவல்துறையும் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் டர்ன் தரான் மாவட்டம் ரஜோக் கிராமத்தில் சர்வதேச எல்லைக்கு அருகே பாகிஸ்தானின் டிஜேஐ மாட்ரிக் ஆர்டிகே - 300 (DJI Matric RTK- 300) என்ற ஆளில்லா விமானம் இன்று(திங்கள்கிழமை) காலை கைப்பற்றப்பட்டது.
எல்லை பாதுகாப்புப் படையினரும் பஞ்சாப் காவல்துறையும் சேர்ந்து கைப்பற்றியுள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | மக்களவை கூட்டத்தில் ராகுல் காந்தி!