இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் பிரதமர் பேசுவதே அவரது கடைசி சுதந்திர தின உரையாக இருக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் சார்பில் சுதந்திர தினத்துக்கு முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஹிமாசல் கனமழை: பலி எண்ணிக்கை 48 ஆக அதிகரிப்பு!
அப்போது அவர் பேசியதாவது: இந்தியா கூட்டணி விரைவில் களத்தில் இறங்கி சிறப்பாக செயல்படும். தில்லி செங்கோட்டையில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் இடம்பெறும் பிரதமரின் உரை பிரதமராக அவர் கொடுக்கும் கடைசி உரையாக இருக்கும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றும். இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் பாஜகவை வீழ்த்தும். மேற்குவங்கத்தில் மாபெரும் அளவில் பாஜக வீழ்த்தப்படும். பிரதமர் ஆசை எனக்கு இல்லை. பாஜக வீழ்த்தப்பட வேண்டும். பாஜக ரஃபேல் போன்ற விஷயங்களில் ஊழலில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ளது. மேற்குவங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. நாங்கள் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசு மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளது என்றார்.