2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலையொட்டி ஜார்கண்ட் மாநில தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை மேற்கொண்டார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாநில தலைவர்களுடன் அவ்வபோது காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வரும் நிலையில், இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மாநில தலைவர் ராஜேஷ் தாக்குர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.