பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காங்கிரஸில் இணைந்த திரிணமூல் காங்கிரஸின் முன்னாள் இளைஞரணித் தலைவர்

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் இளைஞரணித் தலைவர் யாசர் ஹைதர் காங்கிரஸில் இன்று இணைந்தார்.  

News image
Updated On :19 ஆகஸ்ட் 2023, 1:10 pm

DIN

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் இளைஞரணித் தலைவர் யாசர் ஹைதர் காங்கிரஸில் இன்று இணைந்தார். 
கொல்கத்தாவில் கட்சியின் மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி முன்னிலையில் அவர் தன்னைக் காங்கிரஸில் இணைத்துக்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்பு நான் திரிணமூல் காங்கிரஸில் இருந்தேன், தற்போது காங்கிரஸில் இணைந்துள்ளேன். திரிணமூல் காங்கிரஸில் பணியாற்ற எனக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. 
மேலும் காங்கிரஸில் சேர வேண்டும் என்பது எனது கனவு. ஆதிர் இங்கே இருக்கிறார். சௌமென் பாலுடன் நீண்ட நாட்களாக தொடர்பில் இருக்கிறேன். நான் காங்கிரஸுக்கு வந்த ஒரே காரணம் கட்சி உறுப்பினராக பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான். 
திரிணமூலில் நான் அரசியல்வாதியாக அறியப்படவில்லை, ஆனால் சமூகவாதியாக அறியப்பட்டேன். இவ்வாறு அவர் கூறினார். யாசர் ஹைதர், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் கொல்கத்தா மேயருமான ஃபிர்ஹாத் ஹகீமின் மருமகன் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.