அசாமில் பாஜக எம்.பி. வீட்டில் இருந்து சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம், கச்சார் மாவட்டத்தில் பாஜக எம்.பி. ராஜ்தீப் ராயின் வீடு உள்ளது. இங்கிருந்து 10 வயது சிறுவனின் சடலம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்பு உடற்கூராய்வுக்காக சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கச்சார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்ரதா சென் கூறுகையில், கழுத்தில் துணியால் சுற்றப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் காணப்பட்டது. சிறுவனின் தாயார் தோலாய் பகுதியைச் சேர்ந்தவர். அவர் இரண்டரை ஆண்டுகளாக பாஜக தலைவரின் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பாத எம்.பி., போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


