ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும்: கௌரவ் கோகோய்

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்கும் என காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான கௌரவ் கோகோய் தெரிவித்தார். 
ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும்: கௌரவ் கோகோய்
Published on
Updated on
1 min read

அசோக் கெலாட் தலைமையிலான அரசின் மக்கள் நலத் திட்டங்களால் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்கும் என காங்கிரஸ் தலைவரும், எம்பியுமான கௌரவ் கோகோய் தெரிவித்தார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடனான சந்திப்பு நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் கோகோய் இதை தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியது, 

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கான சூழல் நன்றாக உள்ளதாகவும், கெலாட் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. எனவே, காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும். 

இந்த சந்திப்பில் அபிஷேக் தத் மற்றும் கணேஷ் கோடியல் ஆகியோர் கோகோய் உடன் கலந்துகொண்டனர். 

இந்தாண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com