கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மத்திய அரசின் கோதுமை ஏற்றுமதி, இறக்குமதி திட்டங்களை விளாசும் காங்கிரஸ்!

மத்திய அரசின் கோதுமை ஏற்றுமதி, இறக்குமதி திட்டங்களால்  ஏழை மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 

News image
Updated On :5 டிசம்பர் 2023, 11:13 am

DIN

மத்திய அரசின் கோதுமை ஏற்றுமதி, இறக்குமதி திட்டங்களால்  ஏழை மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 

பிரதமர் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதால் நாட்டில் உள்ள ஏழை மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஊடக அறிக்கை ஒன்றை அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த அறிக்கையில் மத்திய அரசு எதிர்வரும்  நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து இந்தியாவில்  கோதுமை விலையேற்றத்தை குறைப்பதற்காக ரஷியாவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்ய அனுமதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, உலகுக்கே உணவளிக்கும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாகக் கூறினார். அவர் கோதுமை ஏற்றுமதிக்கு தாராளமாக அனுமதி அளித்தார். அதன்பின், இந்தியாவில் கோதுமைக்கு நெருக்கடி வந்துவிட்டது. கடந்த ஆண்டு இறுதியில்  இந்தியாவில் கோதுமை இருப்பு 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது. நிலைமை மிகவும் மோசமடைந்த பிறகு இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது.

தற்போது அரசு கோதுமையை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது. பிரதமர் தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளும் முயற்சியில் மீண்டுமொருமுறை ஏழை மக்களை கடினமான சூழலுக்குத் தள்ளியுள்ளார் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.