கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கர்நாடகம்: 900 கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு -ஸ்கேன் மையங்களில் அதிகாரிகள் சோதனை!

மாண்டியா மாவட்டத்தில் சட்டவிரோதமாக 900 கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :6 டிசம்பர் 2023, 2:51 pm

DIN

பெங்களூரு : கர்நாடகத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இயங்கி வரும் சர்க்கரை ஆலை ஒன்றில், சட்டவிரோதமாக கருக்கலைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில், மாண்டியா மாவட்டத்தில் இயங்கி வரும் பல மருத்துவ ஸ்கேன் மையங்களில், இன்று(டிச.6) சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, அரசு விதிகளை முறையாகப் பின்பற்றாத ஸ்கேன் மையங்கள் சீல் வைக்கப்பட்டன.

முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன்னர், சட்டவிரரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டதாக  எழுந்த புகாரில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தனியார் ஏஜெண்டுகள் உள்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  அதன் பின் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா, என்பதை  கண்டறிவது தொடர்பாக கர்ப்பிணிகளை தொடர்பு கொள்ளும் சில தனியார் ஏஜெண்டுகள், அவர்களிடமிருந்து இந்த பரிசோதனைக்காக ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்காக மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இயங்கி வரும் சர்க்கரை ஆலை ஒன்றில், பரிசோதனைக்கான அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டு, அங்கு ரகசியமாக கருவின் பாலினத்தை கண்டறிவதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வந்துள்ளன.

பரிசோதனை முடிவில், சிசுவின் பாலினம் பெண் என்பது கண்டறியப்பட்டால், உடனடியாக கருக்கலைப்பு மேற்கொள்ளவும், சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளிடம் அனுமதி கோரப்படும். அதனைத்தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு  கருக்கலைப்பு சிகிச்சை செய்வதற்காக, அவர்களிடமிருந்து இந்த கும்பல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் வசூலித்து கருக்கலைப்பு செய்துள்ளனர்.

அந்த வகையில், குறைந்தபட்சம், 900 கருக்கலைப்புகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பூதகரமாக வெடித்துள்ள கருக்கலைப்பு விவகாரம் குறித்து, சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.