5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

'இந்தியா' கூட்டணியினர் ஒற்றுமையாக உள்ளோம்: சஞ்சய் ரௌத்

'இந்தியா' கூட்டணியினர் ஒற்றுமையாக உள்ளதாக சிவசேனை கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:52 pm IST

'இந்தியா' கூட்டணியினர் ஒற்றுமையாக உள்ளதாகவும், இதன் அடுத்த கூட்டம் டிசம்பர் 16 முதல் 18-ஆம் தேதிக்குள் நடைபெறலாம் என்றும் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிவசேனை கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த தலைவர் சஞ்சய் ரௌத் கூறியதாவது, “இந்தியா கூட்டணியின் கூட்டம் இன்று (டிச. 6) நடைபெறுவதாக இருந்தது. ஆனால் சில முக்கியமான தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை இருக்கிறது. 

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வீட்டில் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது மாநிலத்தில் வெள்ள மீட்பு பணிகளில் இருக்கிறார், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமாருக்கு உடல்நிலை சரியில்லை, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் வரமுடியாத சூழ்நிலையில் உள்ளார்.

எனவே இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் டிச.16 முதல் 18-ஆம் தேதிக்குள் நடைபெறும். எங்களது கூட்டணிக்கான முகம் மற்றும் பல முக்கிய முடிவுகள் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும். இந்தியா கூட்டணியினர் ஒற்றுமையாக இருக்கிறோம். அதனை 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் காண்பீர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (புதன்கிழமை) இந்தியா கூட்டணியின் கூட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.