புவனேஷ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மலிவு விலை கட்டணத்தில் அதிநவீன பேருந்து சேவையை முதல் கட்டமாக ஒடிசாவின் கோரபுத் மாவட்டத்தில் அறிமுகம் செய்துள்ளார். முதல்கட்டமாக ஆறு மாவட்டங்களுக்கு இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நகரங்களை இணைக்கக் கூடிய பல்வேறு வகையிலான போக்குவரத்து முறைகள் முன்னெடுப்பின்கீழ் மாநில அரசு 1,623 பேருந்துகளை கிராமப்புறப் பகுதிகளுக்கு ரூ.3,178 கோடி செலவில் இயக்கவுள்ளது.
முதல்கட்டத்தில், 1,131 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் 63 லட்சம் மக்கள் பயனடைய உள்ளார்கள்.
மாவட்டத்தின் தலைநகருக்குக் கிராமப்புறங்களில் இருந்து செல்ல விரும்பும் பெண்கள், மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.5 கட்டணத்தில் இந்தப் பேருந்து சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
காணொலி உரையின்போது முதல்வர் பட்நாயக், அதிநவீன பேருந்துகள் ஆறு மாவட்டங்களில் 234 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கவுள்ளன. இதனால் 13 லட்சம் மக்கள் பயனடைவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


