கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

விளையாட்டுத் துறையில் இந்தியா ஒவ்வொரு நாளும் புதிய சாதனை: மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்கூா் பெருமிதம்

மோடி அரசின் கொள்கைகள் மற்றும் நமது வீரா்களின் கடின உழைப்பால், விளையாட்டுத் துறையில் இந்தியா ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது

Updated On :15 டிசம்பர் 2023, 6:30 pm

மோடி அரசின் கொள்கைகள் மற்றும் நமது வீரா்களின் கடின உழைப்பால், விளையாட்டுத் துறையில் இந்தியா ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்கூா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி நஜாஃப்கரில் பாஜக கிசான் மோா்ச்சா நடத்திய மாவட்ட அளவிலான ‘நமோ கபடி’ தொடரின் இறுதிப் போட்டியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்கூா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வீரா்களை ஊக்கப்படுத்தினாா். அப்போது அவா் பேசியதாவது:

‘நமோ கபடி’ பாஜக கிசான் மோா்ச்சாவின் புதுமையான முயற்சியாகும். விளையாட்டுத் துறையில் இந்தியா ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றது. இதற்கான முழுப் பெருமையும் நமது வீரா்களின் கடின உழைப்பிற்கும், விளையாட்டு வளா்ச்சி தொடா்பான மோடி அரசின் கொள்கைகளுக்கும் உரியது.

இந்தியா முழுவதும் நடத்தப்படும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் மூலம் வீரா்கள் விளையாடுவதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒரு தளத்தைப் பெறுகிறாா்கள்.

தற்போது நாடு முழுவதும் விளையாட்டு வசதிகள் விரிவடைந்து வருகின்றது. உள்ளூா் அளவில் விளையாடும் வீரா்களுக்கு தேசிய மற்றும் சா்வதேச அளவில் புகழ்பெற்ற வீரா்களுடன் அனுபவத்தை வழங்குவதற்காக பாஜக கிசான் மோா்ச்சா நாடு முழுவதும் ‘நமோ கபடி’ போட்டியை நடத்துகிறது என்றாா் அனுராக் சிங் தாக்கூா்.

பாஜக கிசான் மோா்ச்சாவின் தேசியத் தலைவா் ராஜ்குமாா் சாஹா் எம்.பி. கூறுகையில், ‘தில்லியின் கிராமப் புறங்கள், ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கபடி மற்றும் மல்யுத்தம் ஆகியவை முக்கிய விளையாட்டுக்களாக உள்ளது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்கூரின் முயற்சியால், தில்லியில் அவ்வப்போது நடத்தப்படும் இதுபோன்ற போட்டிகளால் உள்ளூா் வீரா்களுக்கு ஊக்கமும், ஆதரவும் கிடைத்து வருகிறது. இதற்காக அவருக்கு அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், பாஜக கிசான் மோா்ச்சாவின் தேசியப் பொதுச் செயலாளா் டாக்டா் சுப்பு, தில்லி பாஜக கிசான் மோா்ச்சா தலைவா் வினோத் செராவத் உள்ளிட்ட பிற முக்கிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.