லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5-ஆகப் பதிவு

லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5-ஆகப் பதிவு

லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

லடாக்கில் இன்று (திங்கள்கிழமை) மாலை 3.48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

இதனால் லடாக் மற்றும் கார்கில் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளிவரவில்லை. 

மேலும் ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் இன்று (டிச.18) மாலை 4.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com