

சிகார் (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டம், ஸ்ரீமதோபூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் பலியாகினர், 3 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறை அதிகாரி கைலாஷ் சந்த் குர்ஜார் கூறுகையில், சிகார் மாவட்டம், ஸ்ரீமதோபூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் பலியானார். 3 பேர் காயமடைந்தனர்.காயமடைந்த மூன்று பேரும் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | பாஜக வெற்றிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திர மோசடியே காரணம்
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.