திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இந்த அடுக்குமாடி குடியிருப்பு வாழத் தகுதியற்றது: மாநகராட்சி நோட்டீஸ்

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என நிர்வாகம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது

News image

கோப்புப் படம்

Updated On :22 டிசம்பர் 2023, 7:14 am

DIN

புதுதில்லி: தில்லி மாநகராட்சி நிர்வாகம், சிக்னேச்சர் வியூ அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறச் சொல்லி நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

வடமேற்கு தில்லி, முகர்ஜி நகரில் உள்ள இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு 2007-09 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இங்கு மத்திய மற்றும் உயர்தர வர்க்கத்தைச் சார்ந்த குடியிருப்புகள் 336 உள்ளன. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் கட்டுமானத்தில் சிக்கல் உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இங்கு மனிதர்கள் வாழ்வது ஆபத்தானது மற்றும் இந்த இடம் வாழத் தகுதியற்றது என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியிருப்போர் நலச் சங்கம், இந்தக் கட்டுமானத்தில் குறைபாடு இருப்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். புதிய கட்டுமானம் கட்டப்படும் வரையிலான வாடகை இழப்பீடு எங்களுக்குத் தரப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது.

இந்தக் குடியிருப்புகளை மாநகராட்சி தகர்க்க முடிவு செய்துள்ளது. ஐஐடி தில்லி வல்லுனர் குழுவின் ஆலோசனையின்படி சோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரி கட்டுமான சேர்க்கையில், குளோரைடு அதிகமாக இருப்பதால் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இதனால் கான்கிரீட் கட்டுமானம் வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி மேம்பாட்டு வாரியம் 336 குடியிருப்புகளும் உடனடியாக காலி செய்யப்பட்டால், இழப்பீடு தருவதாக முன்னர் தெரிவித்திருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.