கேரளத்தில் வெளிப்படையான ஆள்சேர்ப்புக்கான புதிய வாரியம் தொடக்கம்!

மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வெளிப்படையான ஆட்சேர்ப்பு செயல்முறைகளுக்கான புதிய வாரியத்தை கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்.
பினராயி விஜயன் (கோப்புப்படம்)
பினராயி விஜயன் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

மாநில பொதுத்துறை நிறுவனங்களில் வெளிப்படையான வேலை ஆட்சேர்ப்பு செயல்முறைகளுக்கான புதிய வாரியத்தை கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்.

மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் திறமையான நபர்களை வெளிப்படையான ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் பணியமர்த்துவதற்காக மாநில அரசால் நிறுவப்பட்ட தன்னாட்சி வாரியத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை திறந்து வைத்தார்.

இதுகுறித்துப் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “இந்த வாரியம் மாநிலத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதலாவதாக, தொழில் மற்றும் வணிகத் துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு அதிகாரம் இந்த வாரியத்தின் கீழ் இருக்கும். 

கூடுதலாக, பிற துறைகளின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களும் ஆட்சேர்ப்பு நோக்கங்களுக்காக இதன் சேவைகளைப் பயன்படுத்தலாம். பொதுத்துறை நிறுவனங்கள் சிறந்த வருவாய் மற்றும் லாபத்தை அடைவதற்கு உதவுவதற்காக இந்த வாரியம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சேர்ப்பு நடைமுறையில் இடஒதுக்கீடு கொள்கையும் கடைபிடிக்கப்படும்.” என்று அவர் கூறினார்.

தொழில்துறையின் வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கை அவர் எடுத்துரைத்தார். மேலும் அது தனியார் துறையால் மறைக்கப்படக்கூடாது என்பதையும் கேரள முதல்வர் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com