டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கான அழைப்பிதழ் இன்னும் வரவில்லை: உத்தவ் தாக்கரே

அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு செய்வதற்கான அழைப்பு இன்னும் வரவில்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:33 pm

DIN

மும்பை: அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு செய்வதற்கான அழைப்பு இன்னும் வரவில்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று தெரிவித்துள்ளார்.

ராம் லல்லா அனைவருக்கும் சொந்தமானவர், என்பதால் தனக்கு முறையான அழைப்பு தேவையில்லை என்றும், நான் விரும்பும் போது கோயிலுக்கு செல்வேன் என்று தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையானது நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை இந்த மாபெரும் விழாவுக்கு அழைப்பு விடுத்து வருகிறது.

இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தாக்கரே, ராமஜென்மபூமி இயக்கத்திற்காக சிவசேனா நீண்ட போராட்டத்தை மேற்கொண்டுள்ளது. இடைத் தேர்தலின் போது ராமர் கோயில் மற்றும் இந்துத்துவாவுக்காக பிரச்சாரம் செய்ததற்காக தனது தந்தையும் சிவசேனா நிறுவனருமான பால் தாக்கரேவின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

மகாராஷ்டிர முதல்வராக இருந்தபோதே அயோத்திக்கு சென்றதை உத்தவ் தாக்கரே நினைவு கூர்ந்தார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புதான் ராமர் கோயில் கட்ட வழிவகுத்தது, மத்திய அரசுக்கு இதில் எந்த பங்கும் இல்லை என்றார்.

குடமுழுக்கு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட 6,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.