திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமலை மலைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை, கரடிகள் நடமாடுவது பதிவாகியுள்ளன.
இதையடுத்து அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் குழுவாக இணைந்து கூட்டமாகச் செல்லும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி மலைப்பாதையில் கடந்த சில மாதங்களாகவே சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால், நடைபாதை வழியாக திருப்பதிக்கு மலையேறும் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.