இந்தியக் குடியுரிமையை இத்தனை லட்சம் பேர் துறந்துள்ளனரா? : வெளியுறவுத் துறை அமைச்சர் தகவல்

 கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 16 லட்சத்துக்கும் அதிககமான இந்தியர்கள் தங்களது இந்தியக் குடியுரிமையை துறந்துள்ளதாக அரசு சார்பில் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 16 லட்சத்துக்கும் அதிககமான இந்தியர்கள் தங்களது இந்தியக் குடியுரிமையை துறந்துள்ளதாக அரசு சார்பில் மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து மாநிலங்களவையில்  அவர் பேசியதாவது: கடந்த 2011 ஆம் ஆண்டில் 1,22,819 பேரும், 2012 ஆம் ஆண்டில் 1,20,923 பேரும், 2013 ஆம் ஆண்டில் 1,31,405 பேரும், 2014 ஆம் ஆண்டில் 1,29,328 பேரும் தங்களது இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளனர். 2105 ஆம் ஆண்டில் 1,31,489 பேரும், 2016 ஆம் ஆண்டில் 1,41,603 பேரும், 2017 ஆம் ஆண்டில் 1,33,049 பேரும் தங்களது குடியுரிமையை துறந்துள்ளனர். இந்தியக் குடியுரிமையை 2018 ஆம் ஆண்டில் 1,34,561 பேரும், 2019 ஆம் ஆண்டில் 1,44,017 பேரும், 2020 ஆம் ஆண்டில் 85,256 பேரும், 2021 ஆம் ஆண்டில் 1,63,370 பேரும் துறந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,25,620 ஆக உள்ளது. இதன் மூலம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தமாக 16,63,440 இந்தியர்கள் தங்களது இந்தியக் குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 5 இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். மேலும், இந்தியர்கள் குடியுரிமை பெற்றுள்ள 135 நாடுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com