பயணிகளின் லக்கேஜ்களை விமான நிலையத்திலேயே விட்டு பறந்த இண்டிகோ விமானம்!

ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து 37 பயணிகளின் லக்கேஜ்களை கவனக்குறைவாக விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு பயணிகளை ஏற்றிச் சென்றது இண்டிகோ விமானம்.
இண்டிகோ
இண்டிகோ
Published on
Updated on
1 min read


ஹைதராபாத்: ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து 37 பயணிகளின் லக்கேஜ்களை கவனக்குறைவாக விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு பயணிகளை ஏற்றிச் சென்றது இண்டிகோ விமானம். 

இதுதொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

"ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்ட 6E 409 விமானத்தில் சென்ற 37 பயணிகளின் லக்கேஜ்கள் கவனக்குறைவாக விட்டுச் சென்றதை இண்டிகோ விமான நிறுவனம் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது". 

மேலும், விசாகப்பட்டினத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் முகவரிகளுக்கு அனைத்து பைகளும் பாதுகாப்பாக வழங்கப்படுவதை உறுதி செய்வதாகவும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com