வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பிபிசியின் ஆய்வு பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை: மம்தா

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையின் கணக்கெடுப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். 

News image
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)
Updated On :15 பிப்ரவரி 2023, 11:30 am

DIN

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையின் கணக்கெடுப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். 

தில்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றது. இது பாஜக தலைமையிலான மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் செயல் என்று குற்றம் சாட்டியுள்ளார். 

பிரதமர் மற்றும் குஜராத் கலவரம் குறித்து இரண்டு பகுதி ஆவணப்படத்தை ஒளிபரப்பாளர் ஒளிபரப்பிய சில வாரங்களுக்குப் பிறகு வருமான வரித்துறையின் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. 

இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதுபோன்ற செயல்கள் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதிக்கிறது. பாஜக அரசு ஊடகங்களைக் கட்டுப்படுத்துகிறது. 

ஒருநாள் நாட்டில் ஊடகங்கள் இருக்காது. பாஜக தலைவர்கள் மக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்களின் ஒரே ஆணை சர்வாதிகாரம். அவர்கள் ஹிட்லரை விட மோசமானவர்கள் என்று அவர் விமர்சித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.