திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 77 வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 91.4 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
திரிபுராவில் 60 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று(பிப். 16) ஒரே கட்டமாக நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 51.35% வாக்குகளும் பிற்பகல் 3 மணி வரை 69.96 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருந்தன. மாலையில் ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்கப்பட்டு 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 76.9 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
திரிபுரா மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 28.13 லட்சம். இவா்கள் வாக்களிக்க வசதியாக 3,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இன்று பதிவான வாக்குகள், மாா்ச் 2-இல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


