சத்தீஸ்கரின் ஒன்பதாவது ஆளுநராக விஸ்வபூஷண் ஹரிசந்தன் இன்று பதவியேற்றார்.
ஆளுநர் மாளிகையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அருப் குமார் கோஸ்வாமி, ஹரிசந்தனுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
89 வயதான ஹரிசந்தன், சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, ஆந்திர மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றினார்.
சமீபத்தில் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்ட அனுசுயா உய்கேக்குப் பின் ஹரிசந்தன் ஆளுநராகப் பதவியேற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் நாராயண் சண்டேல், மாநில அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஒடிசாவைச் சேர்ந்த ஹரிசந்தன், அந்த மாநிலத்தில் ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நான்கு முறை அமைச்சராகப் பணியாற்றினார்.
1980-இல் ஒடிசாவில் பாஜகவின் தலைவராக இருந்த அவர் மேலும் மூன்று முறை மாநிலக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1996 முதல் 2009 வரை 13 ஆண்டுகள் ஒடிசா சட்டப்பேரவையின் பாஜக கட்சித் தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் சிலையுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர்!
ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!

நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
ரூ. 1,000 கோடி சொத்துள்ள தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


