கிராமப்புற சாலைகள், பாலங்களை மேம்படுத்த ரூ.1,745 கோடி ஒப்புதல்!

கிராமப்புற சாலைகள் மற்றும் பாலங்களின் கட்டுமானம், மேம்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் ஆகியவற்றிற்காக ராஜஸ்தான் அரசு ரூ.1,745.73 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அசோக் கெலாட்  (கோப்புப் படம்)
அசோக் கெலாட் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: கிராமப்புற சாலைகள் மற்றும் பாலங்களின் கட்டுமானம், மேம்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் ஆகியவற்றிற்காக ராஜஸ்தான் அரசு ரூ.1,745.73 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கான முன்மொழிவுக்கு முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 266 சாலைகள் மற்றும் 35 பாலங்கள் அமைக்கப்படும்.

2,369 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள் மற்றும் 3,369 மீட்டர் பாலங்கள் என 301 பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுப்பணித்துறை மூலம் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com