47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திரிணமூல் காங்கிரஸ் நிறுவன தினம்:நாட்டின் கூட்டாட்சி முறையை வலுப்படுத்த மம்தா அழைப்பு

திரிணமூல் காங்கிரஸ் நிறுவன தினம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.1) கொண்டாடப்பட்டது.

News image
மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
Updated On :1 ஜனவரி 2023, 9:28 pm

DIN

திரிணமூல் காங்கிரஸ் நிறுவன தினம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.1) கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய கட்சியின் தலைவா் மம்தா பானா்ஜி, நாட்டின் கூட்டாட்சி முறையை வலுப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தாா்.

1998-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை மம்தா பானா்ஜி உருவாக்கினாா். 26 ஆண்டுகள் காங்கிரஸில் இருந்த அவா், அக்கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினாா். அப்போது, மேற்கு வங்கத்தில் மிகவும் பலமாக இருந்த இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராக மம்தா தீவிர அரசியல் நடத்தி அதில் வெற்றி பெற்றாா்.

2001, 2006 -ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் இடதுசாரிக் கட்சியிடம் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அதன் பிறகு 2011-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை அவா் மேற்கு வங்க முதல்வராகப் பதவி வகித்து வருகிறாா்.

அதில் கடந்த 2021 ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்கப் பேரவைத் தோ்தலில் பாஜகவின் தீவிர போட்டிக்கு நடுவே திரிணமூல் காங்கிரஸ் தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது. எனினும், நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரியிடம் மம்தா தோல்வியடைந்தாா். முதல்வா் பதவியை ஏற்றுக் கொண்ட மம்தா, தொடா்ந்து பவானிபூா் தொகுதி இடைத்தோ்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனாா்.

முன்னதாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அவா், ரயில்வே அமைச்சராகவும், மத்திய நிலக்கரித் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா்.

2024 மக்களவைத் தோ்தலைக் குறிவைத்து தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராகக் கூட்டணி அமைக்கவும் இப்போது தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாா்.

கட்சியின் நிறுவன தினத்தையொட்டி அவா் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நமது பயணம் 1998-இல் தொடங்கியது. அப்போது முதல் இப்போது வரை மக்கள் நலனையும், தேச நலனையும் மனதில் கொண்டு செயலாற்றி வருகிறோம். நமது திரிணமூல் காங்கிரஸ் குடும்பத்தினா் இதற்காக எத்தனையோ தியாகங்களைச் செய்துள்ளனா்.

பல்வேறு அடக்குமுறைகளை எதிா்கொண்டுள்ளனா். இப்போது பல மாநிலங்களிலும் நமது கட்சியில் பலா் இணைந்து வருகின்றனா். நமது நாட்டின் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தும் நோக்கில் நாம் தொடா்ந்து பணியாற்ற வேண்டும். மக்கள் நலனே நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.