சோனியா காந்தி உடல்நிலை குறித்து மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெள்ளிக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி சுவாசப் பாதையில் ஏற்பட்ட நோய் தொற்றின் காரணமாக தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையின் நெஞ்சக நோய் பிரிவில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சோனியா காந்திக்கு ஏற்பட்டுள்ள சுவாசப் பாதை தொற்றிலிருந்து படிப்படியாக குணமடைந்து வருவதாக கங்கா ராம் மருத்துவமனை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | சென்னை கட்டடங்கள் 23.2 கோடி டன் கரியமில வாயுவை வெளிவிடும்!
இதற்கிடையே இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தில்லி திரும்பியதால், செவ்வாய்க்கிழமை மாலை நடைப்பயணம் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, புதன்கிழமை காலை ராகுல் காந்தி மீண்டும் நடைப்பயணத்தில் இணைந்த நிலையில், பிரியங்கா காந்தி அவரது தாயாருடன் மருத்துவமனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.