கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

எப்படி இருக்கிறது ஜோஷிமத்? நேரில் ஆய்வு செய்தார் உத்தரகண்ட் முதல்வர்

சரிந்துகொண்டேயிருக்கும் ஜோஷிமத் பகுதியில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.

News image

எப்படி இருக்கிறது ஜோஷிமத்? நேரில் ஆய்வு செய்தார் உத்தரகண்ட் முதல்வர்

Updated On :9 ஜனவரி 2023, 11:10 am

DIN

டேஹ்ராடூன்: சரிந்துகொண்டேயிருக்கும் ஜோஷிமத் நகரத்தில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார்.

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த புஷ்கர் சிங் தாமி, அனைவருக்கும் அரசு உரிய உதவிகளை செய்யும் என்று உறுதி அளித்துள்ளார்.

வியாழக்கிழமை முதல் அப்பகுதியல் முகாமிட்டுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை நேரில் சந்துத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்த முதல்வர், மக்களை அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சாலைகளில் நடந்து சென்றும், விரிசல் விழுந்த வீடுகளுக்குள் சென்றும் புஷ்கர் தாமி நிலைமையை ஆய்வு செய்தார். மிகவும் அபாயமான பகுதியிலிருக்கும் மக்களை முதலில் பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்துவதே மிக முக்கியப் பணி என்றும் தாமி தெரிவித்துள்ளார்.

நீண்ட கால பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மறுகட்டமைப்பை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.

பிபல்கோடி மற்றும் கௌசார் போன்ற இடங்களுக்கு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் இடமாற்றம் செய்ய தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் தாமி அறிவித்தார்.

பூலோக சொர்க்கம் என்று கூறப்படும் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஜோஷிமத் பூமிக்குள் புதையுண்டு வருகிறது. இந்த நகருக்கு அடியில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தில் ஏற்பட்டிருக்கும் உயரழுத்தம் காரணமாக, நிலப்பரப்பில் வாயுக்கள் வெளியேறுவதால் ஜோஷிமத் நகரமே பூமிக்குள் புதைபடும் அபாயம் நேரிட்டுள்ளது.

அங்கு வியாழக்கிழமை முதல், சாலைகள், வீட்டின் சுவர், கூரைகளில் பெரிய பெரிய விரிசல்கள் ஏற்பட்டு, தொடர்ந்து அந்த விரிசல்கள் விரிவடைந்துகொண்டே வருகின்றன. திடீரென தங்கள் வீடுகள் இப்படி விரிசலடைந்ததால், என்னசெய்வதென்று தெரியாமல் கலங்கிப் போயிருக்கிறார்கள் ஜோஷிமத் மக்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.