வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

ஆளுநர் மீது சந்தேகம் எழுகிறது: அவைத் தலைவர் அப்பாவு

ஆளுநர் ஆர்.என். ரவி, உயர் பதவிக்கு ஆசைப்பட்டு இவ்வாறு நடந்து கொள்கிறாரோ என்று அவர் மீது சந்தேகம் எழுவதாக  பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

News image

ஆளுநர் மீது சந்தேகம் எழுகிறது: அவைத் தலைவர் அப்பாவு

Updated On :9 ஜனவரி 2023, 4:37 pm IST

சென்னை: ஆளுநர் ஆர்.என். ரவி, உயர் பதவிக்கு ஆசைப்பட்டு இவ்வாறு நடந்து கொள்கிறாரோ என்று அவர் மீது சந்தேகம் எழுவதாக  பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

ஆண்டின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த தமிழ்நாடு, திராவிட மாடல் உள்ளிட்ட பல வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என். ரவி வாசிக்காமல் புறக்கணித்தார். தமிழ்நாடு அரசு என்ற இடத்தில் ஒரு சில இடங்களில் இந்த அரசு என்று மாற்றி வாசித்திருந்தார்.

இதனால், பேரவையில் இன்று கடும் சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவைத் தலைவர் அப்பாவு, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சட்ட மேதை அம்பேத்கர் பெயரையே ஆளுநர் வாசிக்காதது  வேதனை அளிக்கிறது.

ஆளுநர் பல பகுதிகளை விட்டும், சில பகுதிகைள சேர்த்தும் வாசித்துள்ளார். இந்த வகையில், சட்டப்பேரவயில் ஆளுநர் அநாகரீகமாக நடந்து கொண்டார்.

மத்திய அரசு தயாரித்த உரையையே நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் வாசிக்கிறார். பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

தேசிய கீதம் வாசிக்கப்பட்ட பிறகே அவையிலிருந்து ஆளுநர் வெளியேற வேண்டும் என்பது மரபு. தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே, பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியிருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் அவர் அவமதித்துவிட்டதாகவே நான் கருதுகிறேன்.

அரசியல் சட்டத்தைக் காக்க வேண்டிய ஆளுநர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார்? என்று தெரியவில்லை என அப்பாவு கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.