இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 114 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 114 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4.41.48.309 கோடியாக உயர்ந்துள்ளது.
கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 5,30,726 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,119 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,46,81,154 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 98.80 சதவீதமாக உள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தில் இதுவரை 220.17 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.