இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, தனது 7 மாடல் கார்களில் 17,362 வாகனங்களை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆல்டோ கே10, எஸ்-பிரெஸ்ஸோ, கிராண்ட் விதாரா உள்ளிட்ட ஏழு மாடல் கார்களின் காற்றுப் பைகளில் பழுது இருப்பதாகக் கூறி 17 ஆயிரம் கார்கள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் அனைத்தும் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 8 முதல் 2023ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வரை உற்பத்தி செய்யப்பட்டவை என்றும் கூறப்படுகிறது.
இந்த கார்கள் திரும்பப் பெறப்பட்டு, அவற்றின் காற்றுப்பைகள் பரிசோதனை செய்யப்பட்டு, தேவைப்பட்டால் கட்டணமில்லாமல் மாற்றித் தரப்படுகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.