கடும் பனிமூட்டம்: வட மாநிலங்களில் 13 ரயில்கள் இன்று தாமதம்!
கடும் பனிமூட்டம் காரணமாக வடமாநிலங்களில் இன்று 13 ரயில்கள் தாமதம் ஆவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


கடும் பனிமூட்டம் காரணமாக வடமாநிலங்களில் இன்று 13 ரயில்கள் தாமதம் ஆவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே தலைநகர் தில்லி மற்றும் அண்டை மாவட்டங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தில்லியில் வரலாறு காணாத அளவுக்கு 2 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வெப்பநிலை பதிவாகி வருகிறது.
கடும் பனி நிலவுவதால் வட மாநிலங்களில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மூடுபனி காரணமாக ரயில், விமான சேவை அவ்வப்போது நிறுத்தப்பட்டு தாமதமாகி வருகிறது.
இந்நிலையில் பனிமூட்டம் காரணமாக இன்று வடக்கு ரயில்வேயில் 13 ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக இயங்கும் ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | பழநியில் இன்று(ஜன. 19) ரோப் கார் சேவை இயங்காது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...