ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஒற்றுமை நடைபயணம்: ராகுலுடன் இணைந்த சிவசேனை எம்பி

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் சிவசேனை கட்சியின் எம்பி சஞ்சய் ரெளத் இணைந்துள்ளார். 

News image
ராகுலுடன் இணைந்த சிவசேனை எம்பி சஞ்சய் ரெளத்
Updated On :20 ஜனவரி 2023, 9:43 am

DIN

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் சிவசேனை கட்சியின் எம்பி சஞ்சய் ரெளத் இணைந்துள்ளார். 

நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்தியும், மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினரான ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நடைபயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, ஹரியாணா, ஹிமாச்சல், தில்லி உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து தற்போது ஜம்மு காஷ்மீரை அடைந்துள்ளது. 

இந்த நடைபயணத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற்ற நடைபயணத்தில் சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத் கலந்து கொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.