அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சத்தீஸ்கரில் மரத்தில் கார் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மரத்தின் மீது கார் மோதி தீப்பிடித்ததில் 3 பேர் உடல் கருகி பலியாகினர். 

News image
Updated On :22 ஜனவரி 2023, 10:53 am

DIN

பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மரத்தின் மீது கார் மோதி தீப்பிடித்ததில் 3 பேர் உடல் கருகி பலியாகினர். 

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: 
சனிக்கிழமை இரவு ரத்தன்பூர் மற்றும் பென்ட்ரா சாலைக்கு இடையே உள்ள கைரா-போடி கிராமத்தில் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. காருக்குள் இருந்தவர்கள் காரில் வெளியே வரமுடியாமல் உடல் கருகி இறந்தனர். 

காருக்குள் இறந்தவர்களின் உடல்கள் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடுகளாக காணப்பட்டதால் இறந்தவர்களை இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 

விபத்துக்குள்ளான கார் பிலாஸ்பூரில் உள்ள டோர்வா பகுதியைச் சேர்ந்த ஷாநவாஸ் கான் என்பவருக்கு சொந்தமானது தெரியவந்துள்ளது. 

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று ரத்தன்பூர்-கோட்டா துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி ஆஷிஷ் அரோரா  கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.